(Uganda National Forest Leopard Killed 3 Years Child)
தென்னாபிரிக்கா கண்டத்தில் உள்ள உகாண்டா நாட்டில் தேசிய பூங்கா ஒன்றில் 3 வயது சிறுவன் ஒருவனை புலி அடித்து தின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள ராணி எலிசபெத் தேசிய பூங்கா மிகவும் பிரபல்யமானது. அங்கு வேலைப்பார்க்கும் பெண் வனத்துறை அதிகாரியின் 3 வயது மகன் தனது பாட்டியுடன் இந்த பூங்காவில் வசித்து வந்துள்ளார்.
விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை தனியே வீட்டினுள் விட்டுவிட்டு பாட்டி வெளியே சென்ற சமயம் திடீரென அங்கு வந்த சிறுத்தை சிறுவனை கடித்து இழுத்து சென்றது. சிறுவனின் அழுகுரல் கேட்டு வந்த பாட்டி சிறுத்தை இழுத்துச் செல்வதை கண்டார். ஆனால் அவரால் காப்பாற்ற முடியவில்லை.
இதனையறிந்த வனத்துறை அதிகாரிகள் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்ட போதும் மறுநாள் சிறுவனின் எலும்பு கூட்டையே கண்டெடுத்துள்ளனர்.
சிறுத்தையானது சிறுவனை கடித்து தின்ற சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு குடியிருப்பு பகுதியை சுற்று பாதுகாப்பு வேலி போடப்படாமல் இருந்ததே காரணம் என கூறப்பட்டுள்ளது.
சிறுவனை கொன்ற சிறுத்தையை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஒரு முறை மனிதனை தின்ற சிறுத்தை மிகவும் ஆபத்தானது, அதனை கண்டுபிடித்து கூண்டினுள் அடைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றது.
Photo Source : kokolife.ng
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)