இலங்கை பணம் மலேசிய முன்னாள் பிரதமரின் அலுவலகத்தில் மறைந்திருந்தது எப்படி?

0
466
Police found Sri Lankan Rupees former Malaysian Prime Minister

(Police found Sri Lankan Rupees former Malaysian Prime Minister)

இருபது லட்சத்து 87 ஆயிரம் ரூபா இலங்கை நாணயத்தாள்கள், மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் அலுவலகம் உள்ளிட்ட 5 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மலேசியாவில் கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீதான வழக்குகளில், தற்போதைய அரசு தீவிரம் காட்டி வருகின்றது.

நஜீப் ரசாஉக் நிறுவிய மலேசியா வளர்ச்சி நிறுவனம் மூலம் பல கோடி டொலர்கள் பண மோசடியில் நஜீப் ஈடுபட்டதாக பல்வேறு நாடுகளில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பண மோசடி வழக்கு தொடர்பாக நஜீப் ரசாக்கின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 5 இடங்களில் நேற்று இரவு முதல் அதிரடி சோதனை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(Police found Sri Lankan Rupees former Malaysian Prime Minister)

More Tamil News

முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்

Tamil News Group websites :