மனைவிக்கு அசிட் அடிக்கச் சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்

0
634
acid attack wife again fallen husband face admit hospital police

acid attack wife again fallen husband face admit hospital police
அரநாயக்க, தெபத்கம பிரதேசத்தில் மனைவியின் தாக்குதலில் கணவன் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை காரணமாக மனைவி மீது எசிட் வீச முற்பட்ட போது அந்த எசிட் அவரின் உடலில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து கூரிய ஆயுதத்தால் கணவன் மீது மனைவி தாக்குதல் நடத்தியுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வந்த பொலிஸார் படுகாயமடைந்திருந்த கணவனை, திப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அரநாயக்க, தெபத்கம பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனை இன்று இடம்பெற உள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அரநாயக்க பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
acid attack wife again fallen husband face admit hospital police

More Tamil News

முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்

Tamil News Group websites :