முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : வைரலாகும் சங்காவின் டுவிட்

0
1732
mullivaikkal remembrance day kumar sangakkara twitter

(mullivaikkal remembrance day kumar sangakkara twitter)
இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த உறவுகளுக்கு தமிழ் மக்கள் மிகவும் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனை ஆயுதமாக பயன்படுத்தி பேரினவாத அரசியல்வாதிகள், இனவாத செயற்பாடுகளை தெற்கில் முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமான நேற்று வெளியிட்டுள்ள தகவல் தற்போது இணையத்தளத்தில் பிரபலமடைந்துள்ளது.

“மே 18 புனிதமான பிரதிபலிப்புக்கு ஒரு நாள், போரில் வாழ்க்கையை இழந்த இலங்கையர்களை நினைவுபடுத்தி பார்ப்பதற்கும், எங்கள் உள்ளத்தின் தீர்ப்புகளை சற்று விலக்கி வைத்துவிட்டு மற்றவர்களின் வலியை இதயம் திறந்து உணர்ந்து கொள்வதற்குமான ஒரு நாளாகும். ஒருவருக்கொருவர் திறந்த மனப்பாங்குடன் இருக்க வேண்டும். அப்போதுதான் வரலாற்றில் இவ்வாறான சம்பவங்கள் திரும்பவும் நடக்காது”
எனது தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

குமார் சங்கக்காரவின் இந்த கருத்துக்கு ஒரு சில தரப்பினரைத் தவிர்ந்த ஏனைய அனைவரும் மிகுந்த வரவேற்பை கொடுத்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :

Tags:mullivaikkal remembrance day kumar sangakkara twitter,mullivaikkal remembrance day kumar sangakkara twitter