ஜூன் மாத ஆரம்பம் தொடக்கம் வேலை நிறுத்தம்

0
471
Mail Union Department two-day Identity Service boycott midnight June 03

(Mail Union Department two-day Identity Service boycott midnight June 03)

எதிர்வரும் ஜூன் மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவிலிருந்து தொடர்ச்சியாக இரண்டு நாள் அடையாள சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அஞ்சல் தொழிற்சங்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஜனவரி மாதம் நடத்த தீர்மானித்திருந்த சேவைப்புறக்கணிப்பு போராட்டம் அமைச்சர் சரத் அமுணுகமவின் தலையீட்டால் கைவிடப்பட்டது.

எவ்வாறாயினும் அன்று வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் இதுவரை அமைச்சரவைக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்று அஞ்சல் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் பொது செயலாளர் எச்.கே.காரியவசம் தெரிவித்துள்ளார்.

(Mail Union Department two-day Identity Service boycott midnight June 03)

More Tamil News

Tamil News Group websites :