அரசாங்கத்துக்கு எதிராக ஜூன் மாதம் முதல் ஆரப்பாட்டம்

0
444
current government unlawful works against constitution g l peirise

(current government unlawful works against constitution g l peirise)

நல்லாட்சி கூட்டணி அரசாங்கம் சட்டவிரோதமானது எனவும் அது அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக செயற்படுவதாகவும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம்சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.

தற்போதைய அரசாங்கம் பதவி விலக வேண்டும், இந்த ஆட்சியாளர்களால் நாட்டை ஆட்சி செய்ய முடியாது என முன்னாள் அமைச்சர் ஒருவர் வௌியிட்ட கருத்துக்கு பதில் அளிக்கும் போதே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனை தெரிவித்தார்.

இதேவேளை, கூட்டு எதிர்க்கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து எதிர்வரும் ஜூன் மாதம் முதல் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

அரசாங்கம் மக்களுக்கு எதிராக செயற்படுகிறது எனவே, மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட அரசாங்கம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உதவியை பெற்றுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(current government unlawful works against constitution g l peirise)

More Tamil News

Tamil News Group websites :