மலேசியா முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பிடம் நான்கு மணி நேரம் விசாரணை !

0
651
former Prime Minister Datuk Seri Najib, malaysia tami news, malaysia, malaysia news, Najib,

{ former Prime Minister Datuk Seri Najib }

மலேசியா: எஸ்.ஆர்.சி இண்டர்நேஷனல் நிறுவனத்தில் நடந்த ஊழல் மற்றும் முறைக்கேடுகள் தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் நான்கு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

செவ்வாய்கிழமை காலை 10 மணி அளவில் புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை அலுவலகத்துக்கு வந்த நஜிப் பிற்பகல் 2.15 மணி வரையில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

எஸ்.ஆர்.சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பான விசாரணைக்கு தாம் முழு ஒத்துழைப்பு வழங்கியிருப்பதாக நஜிப் தெரிவித்துள்ளார். அத்தோடு தேவையான ஆவணங்களையும் சமர்பித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த விசாரணை தொடர்பில் வரும் வியாழக்கிழமை மீண்டும் புத்ராஜெயாவில் எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்தில் தாம் வாக்குமூலம் அளிக்கவிருப்பதாக நஜிப் தெரிவித்துள்ளார்.

ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தின் கிளை நிறுவனமான எஸ்.ஆர்.சி இண்டர்நேஷனல் நிறுவனத்தில் நடந்துள்ள ஊழல் தொடர்பில் நேரில் வாக்குமூலம் அளிக்க வருமாறு கடந்த மே 18 ஆம் திகதி எஸ்.பி.,ஆர்.எம் நஜிப்புக்கு நோட்டிஸ் அனுப்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: former Prime Minister Datuk Seri Najib

<< RELATED MALAYSIA NEWS>>

*லிங் லியோங் சிக் மீதான வழக்கை வாபஸ் பெற்றார் நஜிப்..!

*முன்னாள் அரசுச் செயலாளர் ஹாஷிம் காலமானார்!

*துன் மகாதீரின் அனுபவங்களும் திறமையும் மலேசியாவை நல்ல நிலைமைக்கு கொண்டு வரும்..!

*ஜொகூர் சுல்தானுடன் 2 மணி நேரம் சந்திப்பு நடத்திய அன்வார்!

*எஸ்.ஆர்.சி இண்டர்நேஷ்னல் முறைகேடு விசாரணைக்கு விளக்கமளிப்பதற்காக எஸ்.பி.ஆர்.எம். வந்தார் நஜீப்!

*நஜீப்பின் வழக்கில் இனி நாங்கள் வாதாட மாட்டோம்..! வழக்கறிஞர்கள்

*நாட்டின் கடன் தொகை ஆபத்தான கட்டத்தை எட்டிவிட்டதாக பிரதமர் அறிவிப்பு..!

*கேவியஸ் மீது சட்ட நடவடிக்கை! -மெக்லின் எச்சரிக்கை

*பினாங்கில் பிரிட்டிஷ் பிரஜையை கொடூரமாக தாக்கிய இருவர் கைது..!

*மலேசியரான எவரெஸ்ட் நாயகன் ராமன் நேப்பாளில் சடலமாக மீட்பு..!

<<Tamil News Groups Websites>>