இந்தியாவிலிருந்து விடைபெறுவதற்கு முன் பகிரங்க மன்னிப்புக் கோரிய வில்லியர்ஸ்!

0
1133
AB de Villiers heartwarming message RCB fans

(AB de Villiers heartwarming message RCB fans)

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துள்ள பெங்களூர் அணியின் முன்னணி வீரர் ஏபி.டி.வில்லியர்ஸ் நாட்டுக்கு திரும்புவதற்கு முன்னர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த காணொளியில் பேசிய வில்லியர்ஸ், இவ்வருடம் அணி வெற்றிபெறாமல் வெளியேறியமைக்காக மன்னிப்புக்கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“நாம் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் தோல்வியடைந்தமை கவலையளிக்கிறது. எம்மிடம் சிறந்த வீரர்கள் உள்ளனர். அடுத்த வருடம் நிச்சயமாக பலமான அணியாக மீண்டு வருவோம். இத்தனை வருடங்கள் ஐ.பி.எல். தொடரில் விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது.

எமது அணிக்கு இந்த சீசன் மோசமாக அமைந்திருந்தது. அதற்காக உங்கள் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

இதேவேளை எம்முடன் இணைந்து இறுதிவரை உங்கள் ஆதரவை தந்த பெங்களூர் ரசிகர்கள், இந்திய ரசிகர்கள் மற்றும் முழு உலகத்திலும் உள்ள ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.

<<Tamil News Group websites>>