தமிழ் சினிமா ஆணாதிக்கம் நிறைந்தது : ஸ்ரேயா சரண் ஓபன் டாக்

0
838
Actress Shriya Saran open talk kollywood cinema latest gossip

(Actress Shriya Saran open talk kollywood cinema latest gossip)

தமிழில் எனக்கு  இருபது உனக்கு பதினெட்டு திரைப்படம் மூலம்  அறிமுகமாகி விஜய்  தனுஷ் ,ரஜினிகாந்த் என முன்னணி நடிகர்களுடன் நடித்து ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரேயா

இவர் அண்மையில் தனது நீண்ட நாள் காதலரை கரம்பிடித்து குடும்ப வாழ்வில் காலடி எடுத்து வைத்தார் .இந்நிலையில் தொடர்ந்தும் தான் நடிப்பதாகவும் கூறியுள்ளார் .

இதுகுறித்து அவர் கூறுகையில்,

எனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்கிறேன். என்னைத் தேடி பல தமிழ் பட வாய்ப்புகள் வருகின்றன. கதை பிடிக்காததால் தவிர்த்து வருகிறேன்.

தமிழ் சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக இருக்கிறது. நடிகைகளுக்கு முக்கியத்துவம் குறைவாக உள்ளது. கதை கேட்கும்போது பெரியதாக தோன்றும். ஆனால், படத்தில் கதாபாத்திரம் சிறியதாக மாறிவிடும். தமிழை விட தெலுங்கில் எனக்கு அழுத்தமான கதாபாத்திரங்கள் கிடைத்து வருகின்றன, என்றார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Actress Shriya Saran open talk kollywood cinema latest gossip