பொலிசாரின் அதிரடி நடவடிக்கையால் நால்வர் கைது

0
432
culprits four men arrest police immediate action latest news

இபலோகம – கன்திரியாகம பிரதேசத்தில் கொள்ளைச்சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். culprits four men arrest police immediate action latest news

இவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிர் நிலத்தில் பொருத்தப்பட்டிருந்த நீர்பம்பி ஒன்றை களவாடிய சம்பவம் தொடர்பில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களவாடிய குறித்த நீர்பம்பியின் பெறுமதி 39 ஆயிரத்து 500 ரூபா என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நீர்பம்பியின் உரிமையாளர் காவல்நிலையத்தில் மேற்கொண்டிருந்த முறைப்பாட்டுக்கு அமையவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, இதற்கு முன்னர் அவர்களால் களவாடிய 8 நீர்பம்பிகள் காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
culprits four men arrest police immediate action latest news

More Tamil News

Tamil News Group websites :