ஓரினசேர்க்கைக்கு இணங்காத நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் தானும் தற்கொலை

0
640
suffered death love girlfriend committed suicide indiatamilnews

இந்த நவீன உலகில் பெண்களை தான் பொத்தி பொத்தி பாதுகாக்க வேண்டுமென்று பார்த்தால் ஆண்களையும் அப்படி தான் பார்த்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .(Homosexuality Avoid Friend Killing Young Man Latest Gossip )

சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரிச்சித் தெரு அருகில் உள்ள நரசிங்கபுரம் குடிசைப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சரவணன், பிரபு ஆகிய இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

சென்னையை சேர்ந்த சரவணன், பிரபு ஆகிய இருவரும் நல்ல நண்பர்கள் ஒன்றாக வேலை செய்கின்றனர் .நேற்று வழக்கம் போல வேலையே முடித்து விட்டு இருவரும் ஒன்றாக தங்கும் குடோனிலே தங்கினர் .

காலை வழக்கம் போல் குடோனை சுத்தம் செய்ய உள்ளே வந்த பெண்கள் குடோனில் பிரபு கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும் அவரின் அருகில் சரவணன் துாக்கில் தொங்கியபடி  பிணமாகக் கிடக்கும் நிலையை பார்த்து அதிர்ச்சியாகி குடோன் உரிமையாளருக்கு தகவல் அளித்தனர் .

பிறகு குடோன் உரிமையாளர் சிந்தாதிரிப்பேட்டை போலீஸில் புகார் கொடுத்தார்.

தகவலறிந்து வந்த போலீசார் அவர்கள் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .பரிசோதனை முடிவின் பின் போலீசார் கூறுகையில்

‘பிரபுவும் சரவணனும் சிறுவயது முதல் நண்பர்கள். இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் அருகில் உள்ள குடோனில் வேலைக்குச் சேர்ந்தனர். குடோனில் சரவணன் தனியாக தங்கியிருக்கும் போது பிரபு ஓரினச்சேர்க்கையில் ஈடுபவதாக தகவல் கசியத் தொடங்கியது

குடோனில் சரவணன் தனியாக இருந்தபோது அங்கு வந்த பிரபு, அவரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துள்ளார். அதற்கு சரணவன் மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதால்  ஆத்திரமடைந்த சரவணன் அங்கு கிடந்த கத்தியை எடுத்து பிரபுவை சரமாரியாகக் குத்தி கொலை செய்துள்ளார்.

இதனால் தான் போலீசில் மாட் டி கொள்வோம் என்ற பயத்தால் சரவணனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகின்றது .

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Homosexuality Avoid Friend Killing Young Man Latest Gossip